ஈரோட்டில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் தொடக்கி வைப்பு

ஈரோட்டில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் தொடக்கி வைப்பு

பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் 3 புதிய பேருந்து வழித்தடங்களில் பேருந்துகளை கொடியசைத்து அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், ஈரோடு மாவட்டத்திற்கான 3 புதிய வழிதடத்திற்கான சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை - ஈரோடு மண்டலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 18 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 13 புதிய பேருந்துகளில் 10 புதிய பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் , துவக்கி வைத்துள்ளார்கள்.

அதன்படி, ஈரோடு மண்டலம் சார்பில் ஈரோடு மாவட்டத்திற்கான 3 புதிய பேருந்துகளின் வழிதடங்களின் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு - இராஜபாளையம் , அந்தியூர் இராமேஸ்வரம் , அந்தியூர் கும்பகோணம் ஆகிய வழிதடங்களில் இயக்கப்படவுள்ளது. இந்த புதிய வழிதடங்களின் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Tags

Next Story