தக்கலைக்கு  புதிய பேருந்து சேவை  அமைச்சர் துவக்கி வைப்பு !

தக்கலைக்கு  புதிய பேருந்து சேவை  அமைச்சர் துவக்கி வைப்பு !

பேருந்து சேவை  

தக்கலைக்கு  புதிய பேருந்து சேவை  அமைச்சர் துவக்கி வைத்தார்.

குமரி மாவட்டம் திருவட்டர் அருகே ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் புதிய பேருந்து சேவையினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (08.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்து கூறுகையில்- ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் குலசேகரம் முதல் தக்கலை வரையிலான புதிய பேருந்து சேவை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது குலசேகரத்திலிருந்து திருவட்டார், கட்டைக்கால், மாத்தூர், ஆனையடி,வெட்டுக்குழி வழியாக தக்கலை பேருந்து நிலையத்தினை சென்றடையும். பொதுமக்கள் இப்பேருந்து வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் ஏற்றக்கோடு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும் மாத்தூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கான்வாடி மையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டதோடு, குழந்தைகளுடன் உரையாடினார்கள். அத்தோடு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்திட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்,போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story