மாம்பழஞ்சி தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை: எம்எல்ஏ திறந்து வைப்பு

மாம்பழஞ்சி தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை: எம்எல்ஏ திறந்து வைப்பு

புதிய வகுப்பறையில் மாணவர்கள

மாம்பழஞ்சி அரசு தொடக்கப்பள்ளியில் 24.70 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடத்தை ராஜேஷ் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட, தூத்தூர், மாம்பழஞ்சி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகள் நலன்கருதி வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தூத்தூர், மாம்பழஞ்சி அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.24.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து புதிய வகுப்பறை கட்டிடத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், முன்னாள் நகர தலைவர் ரெஜிஷ், "மாவட்ட நிர்வாகிகள் அருளானந்தம், ஆன்றணி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story