திருவாரூர்: புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

திருவாரூர்: புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

வகுப்பறை கட்டிடம் திறப்பு 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி செல்வராஜ் திறந்து வைத்தனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறையினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story