குமரி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் புதிய பிரிவுகள்

குமரி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் புதிய பிரிவுகள்
குமரி கலெக்டர் ஸ்ரீதர்
குமரி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மூன்று புதிய தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு 10.05.2024 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 07.06.2024 ஆகும். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இந்நிலையத்தில் 2023-ஆம் கல்வியாண்டு முதல் புதிதாக Advanced CNC Machining Technician , Industrial Robotics & Digital Manufacturing மற்றும் Mechanic Electronic Vehicle ஆகிய மூன்று தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/-, பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகவும். 04652-260463, 261463 அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ITI-ல் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story