சேலத்தில் புதிய மின்னொளி கைப்பந்து திடல் திறப்பு !

சேலத்தில் புதிய மின்னொளி கைப்பந்து திடல் திறப்பு !

கைப்பந்து திடல் திறப்பு

சேலத்தில் புதிய மின்னொளி கைப்பந்து திடல் மாவட்ட தலைவர் திறந்து வைத்தார்.
சேலம் மரவனேரி புனித பால் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜி.ராஜ்குமார் ஏற்பாட்டில் ரூ.6 லட்சத்தில் புதிதாக மின்னொளி கைப்பந்து திடல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். புனித பால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் பிரபு வரவேற்றார். சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் (நுண்ணறிவுபிரிவு), என்ஜினீயர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்னொளி கைப்பந்து திடலுக்கான கல்வெட்டை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம், ஜான்சன்பேட்டை தேவதாஸ் உள்பட விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story