சென்னிமலை முருகன் கோவில் புதிய கொடிமர கும்பாபிஷேக விழா

சென்னிமலை முருகன் கோவில் புதிய கொடிமர கும்பாபிஷேக விழா
X
கும்பாபிஷேகம் 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி பாடப்பட்ட சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் இருந்த கொடிமரம் பழுதடைந்தது. இதனையடுத்து சென்னிமலை அனைத்து செங்குந்த சமுதாயத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் அமைக்க திட்டமிடப்பட்டது. 34 அடி உயரம் கொண்ட கொடி மரம் இலுப்பை எண்ணெய், சந்தனாவி தைலம், புங்க எண்ணெய், வேப்பெண்ணெய் உள்ளிட்ட ஐந்து வகையான எண்ணெயில் கடந்த பல மாதங்களாக ஊற வைக்கப்பட்டது.பின்னர் தங்க மூலம் பூசப்பட்டு கடந்த மாதம் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு புனித நீரினை கொண்டு கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொடிமரத்தையும,முருகனையும் வழிப்பட்டனர்.


Tags

Next Story