ரேஷன் கடைகளுக்கு கருவிழி பதிவுடன் கூடிய புதிய கருவிகள்!

ரேஷன் கடைகளுக்கு கருவிழி பதிவுடன் கூடிய புதிய கருவிகள்!

பி.ஓ.எஸ். கருவி வழங்கல் 

நெமிலி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கருவிழி பதிவுடன் கூடிய புதிய கருவிகள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில் 77 முழுநேர கடையும், 23 பகுதி நேர கடையும் உள்ளன. இந்தநிலையில் நெமிலி தாலுகா அலுவலகக் கூட்டரங்கில் 77 முழுநேர ரேஷன் கடைகளுக்கு புதிய கருவிழி பதிவுடன் கூடிய பி.ஓ.எஸ். கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாசில்தார் பாலச்சந்தர் கலந்து கொண்டு விற்பனையாளர்களுக்கு புதிய பி.ஓ.எஸ். கருவிகளை வழங்கினார்.இந்த கருவியின் மூலம் நுகர்வோர் கைரேகை மற்றும் கண் விழி மூலம் பதிவு செய்து பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. மேலும் அனைவருக்கும் பில் வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பறக்கும் படை தாசில்தார் நடராஜன், தேர்தல் துணை தாசில்தார் பன்னீர்செல்வம், தனி வருவாய் ஆய்வாளர் முருகன் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story