காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.

சேலம்– நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று, சித்திரைமாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, காலை 6மணிமுதல் மாலை வரையில் மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் அபிசேக ஆராதனை நடந்தது.

கோவில் முழுவதும் பலவகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வாணையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சேலம், கரூர், தருமபுரி, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலை குன்றின்மீது உள்ள, பாலசுப்ரமணியம் சுவாமிக்கு பகல் 12மணிக்கு, சிறப்பு அபிசேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story