திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு

திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு

அமாவாசை சிறப்பு பூஜை 

கடலூர் மாவட்டம்,திருவதிகை பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை முன்னிட்டு மூலவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் சமேதராக திருமாலிருஞ்சோலை கள்ளழகராக காட்சி அளித்தார். தொடர்ந்து உத்ஸவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் உள் புறப்பாடு நடைபெற்று பின்னர் திருக்கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story