புதிய போலீஸ் டிஎஸ்பி., பொறுப்பேற்பு

புதிய போலீஸ் டிஎஸ்பி., பொறுப்பேற்பு

ராசிபுரத்தில் புதிய போலீஸ் டிஎஸ்பி.,யாக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 

ராசிபுரத்தில் புதிய போலீஸ் டிஎஸ்பி.,யாக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராசிபுரம் புதிய டிஎஸ்பியாக எம்.விஜயகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார். ராசிபுரம் டிஎஸ்பியாக டி.கே.கே.செந்தில்குமார் பணியாற்றி வந்த நிலையில், இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து புதிய டிஎஸ்பியாக எம்.விஜயகுமார் பொறுப்பேற்றுள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டிஎஸ்பியாக பணியாற்றி வந்த நிலையில் ராசிபுரம் டிஎஸ்பியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வெண்ணந்தூர் , பேளுக்குறிச்சி ஆகிய காவல் நிலையத்தில் ஆய்வாளராகவும், கரூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதியில் டிஎஸ்பி ஆகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவருக்கு காவல்துறையினரும், நகர பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story