புதிய நியாய விலைக் கடை திறப்பு

பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் ரூ.9. 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.

ரூ.9. 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையை எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் உள்ள லட்சுமணபட்டியில் சட்டமன்ற தொகுதி மேம்பாடு திட்டம் 2023- 2024 திட்டத்தின் கீழ் ரூபாய் 9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை இன்று திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி.

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி தலைவர் சௌந்தரப்ரியா, ஒப்பந்ததாரர் சக்திவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, புதிய நியாய விலை கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story