புதிய சாலை அமைக்க பூமி பூஜை

புதிய சாலை அமைக்க பூமி பூஜை

பூமி பூஜை 

பல ஆண்டு மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்்மொடக்குறிச்சி அருகேயுள்ள கனகபுரம் ஊராட்சியில் ஜீவா நகர் முதல் மற்றும் இரண்டாவது வீதியில் சாலைகள் பழுதடைந்து இருப்பதாகவும் , இதனால் பொதுமக்கள் சிரமடைந்து வருவதால் , புதிய தார் சாலை அமைத்து தர வேண்டி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியிடம. கோரிக்கை மனுவை அப்பகுதி பொதுமக்கள் அளித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் தார் சாலை அமைத்திட மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி நிதி ரூபாய் 13 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.மேலும் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை கனகபுரம் ஜீவா நகரில் நடைபெற்றது.இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்துகொண்டு தார் சாலை அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் வர்ணம் கார்த்தி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story