தூத்துக்குடியில் புதிய சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடியில் புதிய சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலைகள் அனைத்தும் போடப்பட்ட நிலையில் முக்கிய சாலையில் இணைப்பு சாலையாக இருக்கக்கூடிய தெருக்களிலும் சாலைகள் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மேல சண்முகபுரம், வண்ணார் தெரு, தாமோதரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சாலை அமைக்கும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் சாலைகள் மிகவும் தரமானதாகவும் அமைக்கப்பட வேண்டும் எனவும், காலை அமைக்கும் பகுதிகளில் உள்ள அக்ரிப்புகளை அகற்றுவதற்கும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி அதை சீரமைக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகரில் கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக நிறுத்தி வைகப்பட்டிருந்த சாலை மற்றும் வடிகால் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன மேலும் ஸ்டேட் பேங்க காலனி 60 அடி ரோடு பிரதான சாலையானது என்ட் டு என்டு என்ற முறையில் வரும் நாட்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக தார் சாலை அமைக்கும்படிகள் நடைபெற்று வருகிறது

Tags

Next Story