மயிலம், கொரளூர், பெரமண்டூர் ஊராட்சிகளில் புதிய பள்ளிகட்டிடம்

மயிலம், கொரளூர், பெரமண்டூர் ஊராட்சிகளில் புதிய பள்ளிகட்டிடம்

குத்துவிளக்கேற்றி துவக்கி வைப்பு 

மயிலம், கொரளூர், பெரமண்டூர் ஊராட்சி பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மயிலம், கொரளூர் மற்றும் பெரமண்டூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து மயிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பள்ளி ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story