வகுப்பறை கட்டடம் திறப்பு விழா

வகுப்பறை கட்டடம் திறப்பு விழா

வகுப்பறை கட்டிடம் திறப்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தியாகதுருகம் அடுத்த வடபூண்டி, மேல்பூண்டி தக்கா அரசு துவக்கப் பள்ளிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தலா 25.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன.

அதேபோல் வடபூண்டி பள்ளியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 10.19 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டங்களை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதையடுத்து வடபூண்டி பள்ளி புதிய வகுப்பறை கட்டடத்தில் ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன் குத்துவிளக்கேற்றினர். பி.டி.ஓ., துரைமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர் சக்திவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஊராட்சி தலைவர் கொடியரசி முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அவைத்தலைவர் சாமிதுரை, பன்னீர்செல்வம், ஊராட்சி செயலாளர் செல்வராஜ், தலமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story