இரண்டாக பெயர்ந்த புதிய தார் சாலை

இரண்டாக பெயர்ந்த புதிய தார்  சாலை
 கடையம் அருகே புதிய தார் சாலை பெயர்ந்து உள்வாங்கியதால், தரமாக அமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
கடையம் அருகே புதிய தார் சாலை பெயர்ந்து உள்வாங்கியதால், தரமாக அமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதாபுரத்தில் இருந்து தோரணமலை முருகன் கோவில் செல்லும் சாலை யில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் அருகில் தற்போது பாலம் அமைக்கப்பட்டு சாலை பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக பாலம் அருகில் அமைக்கப்பட்ட தார் சாலை பெயர்ந்து உள்வாங்கியது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு தரமான சாலைகள் அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story