மூக்குப்பேறியில் புதிய மின்மாற்றி திறப்பு

மூக்குப்பேறியில்  புதிய மின்மாற்றி திறப்பு

மின்மாற்றி 

நாசரேத் அருகே மூக்குப்பேறி ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர் புதிய மின் மாற்றியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாசரேத் மின் சார வாரிய துணை பொறியாளர் ஹரிஹர சுப்பிரமணியன், போர்மேன் வேல் முருகேசன் மற்றும் ஊரா ட்சி துணைத் தலைவர் தனசிங், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும் ஊராட்சி ஊறுப்பினருமான கலை அரசு, ஒய்யான்குடி திமுக கிளை செயலாளர் மோசஸ் கிருபைராஜ்,ஒன்றிய தி.மு. க. பிரதிநிதி மணிமாறன், தொழிலதிபர்கள் ஜோசப், ஜெயபால் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story