ஊத்துமலை பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு

ஊத்துமலை பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
ஊத்துமலை பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், வெங்கடேஸ்வரபுரம் அருகே உள்ள ஊத்துமலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ரூபாய் 4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது, இதன் தொடக்க விழா நேற்று மாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் உபகோட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், வெங்கடேஸ்வரபுரம் உதவி மின் பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

Tags

Next Story