திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புதிய அறங்காவலர் நியமனம்

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புதிய அறங்காவலர் நியமனம்

திருபன்றங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புதிய அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அறங்காவலர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்து கூடுதல் தலைமைச்செயலாளர் அரசாணை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், மதுரை வடக்குமாசி வீதி நா. மணிச்செல்வன், ஆனையூர் டிஎம். பொம்மதேவன், நாகமலை புதுக்கோட்டை ப.சத்யபிரியா, பாண்டியன்நகர் வி. சண்முகசுந்தரம், அக்ரிணி ஆண்டாள்புரம் தி. ராமையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு மாதத்திற்குள் பதவியேற்கவும். பதவியேற்ற காலத்திலிருந்து 2 ஆண்டுகள் பதவி வகிப்பா எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story