திருப்பூர் மாநகராட்சியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள்

திருப்பூர் மாநகராட்சியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணிகள்

பணிகளை தொடக்கி வைத்த மேயர்

திருப்பூர் மாநகராட்சியில் தேசிய சுகாதார இயக்கம் 2022-23 திட்டத்தின் கீழ் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல் பணிகளை மேயர் தினேஷ்குமார்,4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்குட்பட்ட 40-வது வார்டில் தேசிய சுகாதர இயக்கம் 2022-23ன் கீழ் ரூ.120.00 இலட்சம் மதிப்பீட்டில் இடுவம்பாளையம் பகுதியில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல் பணியை மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், இளநிலை பொறியாளர்கள் சிவக்குமார், சுரேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story