ஆட்டோ தொழிற்சங்கத்தில் இணைந்த புதிய தொழிலாளர்கள்

ஆட்டோ தொழிற்சங்கத்தில் இணைந்த புதிய தொழிலாளர்கள்

புதிய தொழிலாளர்கள்

மாற்றுத் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பிற தொழிற்சங்கத்தில் இருந்து சிஐடியு தொழிற்சங்கத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் இணைந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு சிஐடியு சங்க மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி வரவேற்புரை ஆற்றினார். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த 20 ஆட்டோ தொழிலாளர்கள் தங்களை சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் கிளை சங்க செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story