புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

 ராசிபுரத்தில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் சார்பாக புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. 

ராசிபுரத்தில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் சார்பாக புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் சார்பாக புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவர் JC HGF R. சதீஷ்குமார், தலைமையில் அகர மஹால் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை 2024 வரவேற்கும் விதமாக குழந்தைகள் நிர்வாகிகள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தினர். இந்த நிகழ்வில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவர் JC HGF R. சதீஷ்குமார், செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் சரஸ்வதி, மற்றும் உறுப்பினர்கள் மணிகண்டன், குபேரானந்தன், தமிழரசன், பூபதி, ரகு, ராஜேஷ் என நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story