திருப்பத்தூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

திருப்பத்தூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

திருப்பத்தூரில் இருசக்கர வாகன பாதுகாப்போர் சங்கம் சார்பில் புத்தாண்டு கொண்டாடபட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில உள்ள இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பாச்சல் பகுதியில் பொது குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் மணவாளன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் துணை தலைவர் குபேந்திரன், செயலாளர்கள் அன்பு, சங்கர், சீனிவாசன், திருப்பதி மற்றும் பொருளாளர் மூர்த்தி சரவணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் கேக்வெட்டி கொண்டாடினர். அனைவருக்கும் புத்தாண்டு நாள்காட்டி வழங்கப்பட்டது. பொது குழுவில் இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் கடைகளில் பணியமர்த்தும்போது குறைந்த பட்ச 16 வயதுக்கு மேற்பட்டவர்களை தான் பணிக்கு அமர்த்தவேண்டும் எனவும், சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். அனைத்து உறுப்பினர்களும் சீருடை அணியவேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story