திருச்செந்தூர் கோயிலில் புத்தாண்டு தரிசனம்

திருச்செந்தூர் கோயிலில் புத்தாண்டு தரிசனம்

ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனையாகி தொடர்ந்து பூஜைகள் நடந்தது. ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே வரிசையில் காத்திருந்து, கோயில் நடை திறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் கடலில் புனித நீராடியும், அங்கப் பிரதட்சணம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Tags

Next Story