மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதி - சமூக வலைதளங்களில் வைரல்

மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதி - சமூக வலைதளங்களில் வைரல்

மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதி 

நேற்று முகூர்த்த தினத்தையொட்டி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற ஈச்சனாரி கோவிலில் பல்வேறு திருமணங்கள் நடைபெற்றது.இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.திருமணம் நடந்து முடிந்த பின்னர் மணமக்கள இருவரும் மறுவீடு செல்லும் நிகழ்வில் மாட்டு வண்டியில் செட்டிபாளையத்தில் உள்ள மணமகன் ஆனந்த் வீட்டுக்கு ஈச்சனாரி கோவிலில் இருந்து மாட்டுவண்டியில் சென்றனர். மாட்டு வண்டியில் சென்ற புது மண தம்பதியினரை சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்து அலைபேசிகளில் புகைபடங்கள் எடுத்தனர்.தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story