முகாம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட நாகியம்பட்டி ஊராட்சியில் நேற்று (ஜூலை-20) மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமை கெங்கவல்லி திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.தலைமை மருத்துவர் வேலுமணி குழுவினர் தலைமையில் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story