மீட்பு
கள்ளக்குறிச்சி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 பெண்களை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக புரோக்கர்கள் 9 பேரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் விபசாரத்தில் ஈடுபடுத்திய 4 பெண்களை கடந்த 18ம் தேதி போலீசார் மீட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் விபசாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டார்.அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், காரனுார் காட்டுகொட்டாய் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 பெண்களை மீட்டனர். இவர்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த கள்ளக்குறிச்சி இந்திரா நகர் ரங்கநாதன் மகன் வீரமணி,31; வ.உ.சி., நகர் பாண்டியன்,54; கவரை தெரு காய்கறி வியாபாரி தர்மராஜ்,50; சங்கராபுரம் அண்ணாதுரை மகன் தங்கராஜ்,41; காரனுார் காட்டுக்கொட்டாய் செந்தில்குமார்,47; மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து விசாரித்தனர். அதில், கோவை, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த வறுமையில் உள்ள பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து, அவர்களின் போட்டோக்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி, விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story