வழக்கு
சங்கராபுரம் அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவரது அப்பா மற்றும் உறவினர்கள் கடுவனுாரைச் சேர்ந்த இளையாபிள்ளை மகன் ரவிசங்கர், 32; என்பவருக்க கடந்த மே மாதம் 13ம் தேதி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமி மன உளைச்சலில் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலர் திரிபுரசுந்தரி திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, மணமகன் ரவிசங்கர், அவரது தந்தை இளையாபிள்ளை, 60; தாய் யசோதை, 57; சிறுமியின் தந்தை மற்றும் தாய் என 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story