Thoothukudi King 24x7 |3 Sep 2024 2:09 AM GMT
அரசின் திட்டத்தை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் என தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்
தூத்துக்குடி மாநகராட்சி பிரைன் நகர் பகுதி கழகம் சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பிரைன் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சர்ருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் அப்போது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொடுத்து கொடுத்தார்.மேலும் விவசாயிகள் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் திமுக அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டார் இந்த கூட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story