Nagercoil King 24x7 |7 Sep 2024 12:30 PM GMT
அருமனையில்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (60). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (60). கூலித் தொழிலாளி. ஜான்சனும் ரசல் ராஜும் பள்ளியில் ஒன்றாக படித்த போது நெருங்கிய நண்பர்களாகும். வயதான பிறகும் இரண்டு பேரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் ஜான்சன் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டார். இதை தெரியாமல் வழக்கம் போல் ரசல்ராஜ் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரசல்ராஜன் மனைவி நண்பன் ஜான்சன் ரப்பர் மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசல்ராஜ் எதுவுமே பேசாமல் அப்படியே அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அவர் மனைவி உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரசல்ராஜ் இறந்ததாக தெரிவித்தனர். நண்பன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story