நாகர்கோவிலில்
குமரி மாவட்டம் வடசேரி அருகில் உள்ள திலகர் தெருவை  சேர்ந்தவர் மணி (51).  இவரது மனைவி நீலா (46). நேற்று காலையில் நீலா தனது வீட்டின் பின்புற பகுதியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்க சென்றார். அப்போது அருகில் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் தாக்கி நீலா மயங்கி கீழே விழுந்தார்.       இதை கண்ட மணி நீலாவை தொட்டு தூக்கிய போது,  அவர் மின்சாரம் பயந்து மயங்கினார். இதைக் கண்ட அவர்களது மகள் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி கொண்டு சென்ற போது பரிசோதித்த போது,  இருவரும் இறந்தது தெரிய வந்தது.         இதை அடுத்து வடசேரி போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த விழாவுக்கு அலங்கார மின் விளக்குகள் அமைத்துள்ளனர். அதற்கான மின் இணைப்பு மணியின் வீட்டின் பின்புறப்பகுதி வழியாக சென்றுள்ளது. அந்த மின் இணைப்பில் மின்கசிவு இருந்திருக்கிறது. இதுதான் இரண்டு பேரின்  உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.       இது தொடர்பாக உதவி மின்  பொறியாளர் கண்ணன் என்பவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வடசேரி போலீசார் விசாரணை நடத்தி அலங்கார மின்விளக்கு அமைத்த சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.'
Next Story