விசாரணை
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுதா, 28. இவர்களுக்கு பிரதீஷ், 6; நிகிதா, 4; என 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை க.மாமனந்தலில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து, எரிந்த நிலையில் சுதாவின் உடலை கள்ளக்குறிச்சி போலீசார் மீட்டனர். இதுகுறித்து கொலை வழக்குப் பதிந்து, தலைமறைவான சுதாவின் கணவர் கார்த்திக்கை தேடி வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் மது போதையில் இருந்த கார்த்திக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story