
X
T.gode (Mallasamudram) King 24x7 |26 Sept 2024 5:18 PM ISTமல்லசமுத்திரத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் நேற்று, தலைவர் திருமலை தலைமையில் செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் முன்னிலையில், அனைத்து நிலை பணியாளர்களுக்கும் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ரத்தஅலுத்தம், சர்க்கரை பரிசோதனை, பல்மருத்துவம், பொதுமருத்துவம், தொழுநோய், குடும்ப நலத்துறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஸ், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் மகேந்திரன், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
