
X
T.gode (Mallasamudram) King 24x7 |27 Sept 2024 7:03 PM ISTஎலச்சிபாளையம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் பதிவேடுகள் முறையாக பராமரித்தல், புதுப்பித்தல் பணிகளை கண்காணிப்து குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, பி.டி.ஓ.,லோகமணிகண்டன் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் 1-7 பதிவேடுகள் முறையாக பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை கண்காணிப்பது தொடர்பாக அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணி இணையாளர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப்பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணி இணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
