சுரைக்காய் கிலோ 15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும் என‌ விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், பொருளூர், தேவத்துார், மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி சுற்றியுள்ள பகுதிகளில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட சுரைக்காய், தற்போது அறுவடை செய்யப்படுகிறது. மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக இருப்பதால், கிலோ 3 ரூபாய் வரை விற்பனையாகிறது. உரம், பூச்சி மருந்து, களையெடுப்பு, அறுவடை கூலி என கணக்கு பார்த்தால், தற்போது விற்கும் விலை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் கவலையடைந்த விவசாயிகள், சுரைக்காய் கிலோ 15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும் என தெரிவித்தனர்.
Next Story