X
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.அதனையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க காப்பு அலங்காரமும் செய்தனர். இரவு 11.30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல் பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். லட்சக்காணக்கான பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். கலெக்டர் பழனி, எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story