X
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரத்தில் ரேஷன் கடை கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இருதரப்பினர் இடைய சமாதான கூட்டம்; ஒரு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரத்தில் சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ரேஷன் கடை இல்லை என்பதால் ராமசாமிபுரத்திலிருந்து பொதுமக்கள் வடுகர் கோட்டை சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் ராமசாமிபுரத்தில் புதிதாக ரேஷன் கடை கட்ட அரசு முடிவு எடுத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்காக அரசு தேர்வு செய்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தில் தான் ரேஷன் கடை கட்ட வேண்டும் அதுதான் பொதுவான இடத்தில் உள்ளது அது அரசுக்கு சொந்தமான இடம் என எனக் கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே இந்த பிரச்சனை தொடர்பாக சமாதான கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அதே இடத்தில் தான் ரேஷன் கடை வேண்டும் எனக் கூறிய ஊர் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் செந்தில்வேல் முன்னிலையில் இருதரப்பினருக்கும் இடையே சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த சமாதான கூட்டத்திற்கு பின் இது குறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது இரு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அதனைத் தொடர்ந்து உறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். சமாதான கூட்டத்தை முன்னிட்டு பரபரப்பான சூழல் நிலவியதால் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேட்டி: பாரதிசேது
Next Story