புகார்

X
ஈரோடு வஊசி பார்க் சாலையில் சேர்ந்தவர் முகிம்கான்.இவரும் இவரது சகோதரரும் இணைந்து அதே பகுதியில் கண்ணாடி விற்பனை நிறுவனம் ஒன்றினை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆதில்கான் என்பவர் 12 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குள் மட்டும் அல்ல வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ஆகியவற்றையும் ஆதில்கான் பார்த்து வந்து உள்ளார்.இதில் கடந்த சில மாதங்களுகாவே கணக்கு வழக்குகளில் முறையாக இல்லாமல் இருந்தது.மேலும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகைகளிலும் மோசடி ஏற்பட்டு உள்ளது என்பதும் மேலும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சலான்கள் போலியாக தயாரித்து கொடுத்ததும் கண்ணாடி நிறுவனத்தின் உரிமையாளர்கள் முகிம் கான் மற்றும் அவரது சகோதரர்களுக்கு தெரிய வந்தது. மொத்தமாக 2 கோடியே வரை ஆதில்கான் மோசடி செய்து அதனை தனது வங்கி கணக்கிற்கும் உறவினர்கள் வங்கி கணக்கிற்கும் ஆதில்கான் அனுப்பி வைத்து உள்ளது தெரிய வந்தது.இச்சம்பவம் குறித்து ஆதில்கானிடம் கேட்ட பொழுது முன்னுக்கு பின்னாக பதில் அளித்தது மட்டுமின்றி கடைக்கும் வராமல் இருந்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்கள் முகிம்கான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.....
Next Story

