தூத்துக்குடி மாசிமாத வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு பாகம்பரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் மற்றும் சங்கர ராமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு இன்று மாசி மாத வளர்பிறை பிரதோஷ தினம் கடைபிடிக்கப்படுகிறது இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் மற்றும் சங்கர ராமேஸ்வரருக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது இதை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தில் வீதி உலா நடைபெற்றது இதை அடுத்து சங்கர ராமேஸ்வரர் மற்றும் நந்தி பகவான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி மற்றும் நந்தி பகவானை வழிபட்டு சென்றனர.
Next Story




