சாவு

சாவு
X
கைத்தறித் தொழிலாளி சாவு
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (62). கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (55). சிப்காட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் தொழிற்சாலையில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். முருகேசனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் முருகேசன், கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றின் அருகில், சாலையோரம், கை, கால்கள் விரைத்துப் போன நிலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்த தகவலின் பேரில், சென்னிமலை போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story