
X

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து- இருவர் உயிரிழப்பு மூன்று பேர் படுகாயம் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆறுதல்;பட்டாசு ஆலை உரிமம் தற்காலிக ரத்து என்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் பேட்டி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் சிவகாசியை சேர்ந்த ராஜசந்திர சேகரன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது.இதில் அந்த அறையில் பணி செய்து கொண்டிருந்த கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (58), கண்டியணேந்தல் கருப்பையா (35) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்த காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் மேலும் வெடிவிபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.விபத்து குறித்து காரியாபட்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு,வருந்ததக்க வகையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்து நடந்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் படுகாயம் அடைந்து வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டதாகவும்,பாதிக்கப்பட்டோருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.இந்நிலையில் விபத்து நடந்த ஆலையின் போர்மேன் வீரசேகரன்,மேலாளர் வைரமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story