இன்று காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற்றது
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று (06.09.2025) காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இன்று வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு சென்று காவலர் தின உறுதிமொழி ஏற்றும் பின்னர் துப்பாக்கி சுடுதள வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட மரம் நடுவிழாவிற்கு தலைமை தாங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மரம் நட்டி காவலர் தினத்தை சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து காவலர் தினத்தை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பாக இருந்து 14 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 இருசக்கர காவல்துறை வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேற்படி நிகழ்வுகளின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுதிர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story