நெய்வேலி: இன்று நன்றி தெரிவிப்பு கூட்டம்

நெய்வேலி: இன்று நன்றி தெரிவிப்பு கூட்டம்

நெய்வேலியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது.


நெய்வேலியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை முன்னிட்டு கடலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் நன்றி அறிவிப்புக் கூட்டம், இன்று (17.06.24) நெய்வேலி சட்டமன்றத் தொகுதி, வடக்குத்து பகுதியில் அமைந்துள்ள GPS மண்டபத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், கடலூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் சி வெ கணேசன் தலைமையில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா இராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலையில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் M.K.விஷ்ணுபிரசாத் MP ஆகியோர் நன்றி கூறினார். இதில் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், தொமுச நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story