நிலக்கோட்டை : காட்டு பன்றிகள் அட்டகாசம் - வேதனையில் விவசாயிகள்

நிலக்கோட்டை : காட்டு பன்றிகள் அட்டகாசம் - வேதனையில் விவசாயிகள்

சேதமடைந்த தென்னங்கன்று 

நிலக்கோட்டை : கடவாக்குறிச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. காட்டுப் பன்றிகள் வயல்வெளிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .கடவாக்குறிச்சி மலையடிவாரத்தில் குல்லிசெட்டிபட்டி, சிவஞானபுரம், போடிய கவுண்டன்பட்டி, கோம்பைப்பட்டி, குளிப்பட்டி, குரும்பபட்டி, மல்லணம்பட்டி கிராமங்கள் உள்ளன. இங்கு மல்லிகை, கம்பு, மக்காச்சோளம் வாழை, தென்னை விளைவிக்கப்படுகின்றன.கடந்த காலங்களில் காட்டு மாடுகள் அட்டகாசத்தால் வாழை பயிரிட முடியாமல் விவசாயிகள் தோட்ட விவசாயமான சம்பங்கி, நெல், கம்பு சோளத்திற்கு மாறினர். இதனையும் காட்டுப்பன்றிகள் விட்டு வைக்காததால் நீடித்த விவசாயமான தென்னைக்கு பலர் மாறி வருகின்றனர். காட்டுப்பன்றிகள் இதனையும் விட்டு வைக்கவில்லை.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags

Next Story