நீலகிரி : அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை.

நீலகிரி : அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை.

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லக்கூடிய கெத்தை மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மலைப்பாதைகளில் உலா வரும் காட்டு யானைகள் அவ்வப்போது அவ்வழியாக வரும் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்தை வழிமறிப்பது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து சென்ற போது காட்டு யானை பேருந்தை வழிமறித்து, பேருந்தை தாக்க ஓடி வந்தது. உடனே ஓட்டுநர் பேருந்தை சாதுரியமாக பின்னோக்கி இயக்கினார். அப்போதும் அந்த காட்டு யானை முகப்பு வெளிச்சத்தை பொருட்படுத்தாமல் பேருந்து முன் வந்தது சிறிது நேரம் கழித்து யானை சாலை விட்டு சென்ற பிறகு அரசு பேருந்து பயணிகளோடு சென்றது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சத்தில் உரைந்தனர். இந்த பரபரப்பு காட்சி தற்போது இணையத்தில் லலைரலாகி வருகிறது.

Tags

Next Story