வடமாநில தொழிலாளியின் பூத உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது

வடமாநில தொழிலாளியின் பூத உடல் சொந்த ஊருக்கு புறப்பட்டது

வடமாநில தொழிலாளரின் உடலுக்கு எம்பி ராசா மரியாதை

ஊட்டியில் உயிரிழந்த கட்ட தொழிலாளியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா ஏற்றுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த மண்சரிவில் சிக்கி, ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த ரிஸ்வான் எனும் கட்டட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

முதலமைச்சர் அறிவுரைப்படி தி.மு‌.க., துணை பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்தவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மண்சரிவில் காயமுற்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கட்டட தொழிலாளி ஜாகீர் என்பவரையும் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்‌.

மேலும், இறந்த ரிஸ்வானின் பூத உடலை ஊட்டியில் இருந்து கோவை வரை ஆம்புலன்ஸ் மூலமும், அங்கிருந்து ஜார்க்கண்ட் வரை விமானம் மூலமும் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுல்ளது. இதற்கான அனைத்து செலவையும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா ஏற்றுக்கொண்டார்.

Tags

Next Story