தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி மாணவன்

அந்தமான் நிக்கோபாரில் நடக்கவுள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியில், தமிழக அணியின் சார்பாக நீலகிரியைச் சேர்ந்த மாணவன் பங்கேற்கிறார்.

அந்தமான் நிக்கோபாரில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைப்பெறுகிறது. இந்த தேசிய அவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியின் சார்பாக நீலகிரி மாணவன் முகமது ஃபாயிஸ் கலந்துக்கொள்ளகிறார்.

போட்டியில் பங்கேற்க்கும் கூடலூர் அருகே தேவர்சோலை ஹோலி கிராஸ் மேல்நிலை பள்ளி படிக்கும் மாணவன் செல்வன் முஹமது ஃபாயிஸ் அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும், பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி டெல்மாபீட்டர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும், வாழ்துக்கூறி வழி அனுப்பிவைத்தனர்.

Tags

Next Story