நீலகிரியில் எட்டு ஆண்டுகளில் இல்லாத வறட்சி

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வாடகை லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி பயிரை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 1,33,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, 17,000 ஏக்கர் காபி, 2,400 ஏக்கர் பரப்பளவில் மிளகு, 2,000 ஏக்கரில் ஏலக்காய், 15,000 ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது . இதில் மலைகாய்கறிகள் விவசாயத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரியில் நிலவும் காலநிலை மற்றும் மண்தன்மை காரணமாக இங்குள்ள உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு நாடு முழுவதும் பெரிய வரவேற்பு உள்ளது. ஆண்டிற்கு மூன்று முறை மலை காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள், கோடை மழையை எதிர்ப்பார்த்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலை காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் கோடை மழை பொய்த்து, கடந்த எட்டு ஆண்டுகளில் நீலகிரி காணாத வறட்சியை தற்போது சந்தித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு தண்ணீர் இன்றி காட்சி அளிக்கின்றன.

15 ஆயிரம் ஏக்கரில் கிணற்று பாசனம் தவிர மீதி உள்ள 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படக் கூடிய நிலை உள்ளது. குறிப்பாக அதிக மலை காய்கறிகளை சாகுபடி செய்யும் முத்தொரை பாலாடா, கல்லக்கொரை, கப்பத்தொரை, நஞ்சநாடு, பைகமந்து சுற்று வட்டார பகுதிகளில் பாயும் பாலாடா ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன. எனவே இந்த சாகுபடியால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்ஸகவலையடைந்துள்ள விவசாயிகள் சிலர் பயிரிடுள்ள மலை பயிர்களை காப்பாற்ற வறண்டு கிடக்கும் ஆற்றில் பள்ளம் தோண்டி நீண்ட நேரம் காத்திருந்து அதில் தேங்கும் நீரை மோட்டார் மூலம் பாய்ச்சி வருகிறனர். சில விவசாயிகள் ரூ.1000 வரை காசு கொடுத்து தண்ணீரை லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி மலை காய்கறிகளுக்கு ஊற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கோடை மழை இல்லாததால் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி குறைந்து அவற்றின் விலையும் கிடுகிடு என அதிகரித்து வருகிறது. மேலும் இனிவரும் நாட்களில் அவற்றின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில், "மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி நிலவுகிறது இதனால் பயிர் பாதிப்பு குறித்து விவரங்கள் சேகரிக்க வருவாய்த் துறை மூலம் இணைந்து செயல்பட்டு வருகிறோம்," என்றார். ...

Tags

Next Story