ராமர் கோவிலுக்கு வருகை புரிந்த நிதி அமைச்சர்

ராமர் கோவிலுக்கு வருகை புரிந்த நிதி அமைச்சர்
ராமர் கோவிலுக்கு வருகை புரிந்த நிதி அமைச்சர்
அயோத்தியில் ராமர்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏரிகாத்த பெருமாள் கோயிலுக்கு வருகை புரிந்தார்.

மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நாளை ராமர் கோவில் திறக்க உள்ள நிலையில் தூய்மை பாரத நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமர் கோவிலுக்கு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை புரிந்துள்ளார். இதில் தூய்மை பாரதம் நிகழ்ச்சிக்காக கோவிலில் தூய்மை பணி செய்து கொண்டுள்ளனர் இதில் மேலும் பாஜக தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்றனர். அதன் பிறகு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று அங்கும் பாரத தூய்மை பணியில் ஈடுபடுகிறார்.

Tags

Next Story